நிலுவைத்தொகை, 124 கோடி ரூபாயை தராவிட்டால், வரும் கல்வி ஆண்டில், இலவச மாணவர் சேர்க்கையை நடத்த மாட்டோம்' என, தனியார் பள்ளிகள் சங்கம் அறிவித்துள்ளது.
மத்திய அரசின், கட்டாய இலவச கல்வி உரிமை சட்டத்தின் படி, தனியார் பள்ளிகளில், எல்.கே.ஜி., வகுப்பில், 25 சதவீத இடங்களில், ஏழை மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இவர்களுக்கான கட்டணம், பள்ளிக்கல்வித் துறை சார்பில், மானியமாக வழங்கப்படும்.
இதன்படி, இரண்டு ஆண்டுகளாக சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு, தமிழக அரசு, 300 கோடி ரூபாய் வரை வழங்காமல், பள்ளிகளுக்கு பாக்கி வைத்துள்ளது. அதனால், பல பள்ளிகள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலையில் உள்ளன.
இது குறித்து, தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்க பொதுச்செயலர், நந்தகுமார் கூறியதாவது: முதல் கட்டமாக, 124 கோடி ரூபாய் தருவதாக அரசு அறிவித்துள்ளது. அந்த நிதி இன்னும் பள்ளிகளுக்கு கிடைக்கவில்லை. கோடை விடுமுறைக்குள், பாக்கி தொகையை தர வேண்டும். இல்லையெனில், இலவச அட்மிஷன் வழங்க முடியாத நிலை ஏற்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய அரசின், கட்டாய இலவச கல்வி உரிமை சட்டத்தின் படி, தனியார் பள்ளிகளில், எல்.கே.ஜி., வகுப்பில், 25 சதவீத இடங்களில், ஏழை மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இவர்களுக்கான கட்டணம், பள்ளிக்கல்வித் துறை சார்பில், மானியமாக வழங்கப்படும்.
இதன்படி, இரண்டு ஆண்டுகளாக சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு, தமிழக அரசு, 300 கோடி ரூபாய் வரை வழங்காமல், பள்ளிகளுக்கு பாக்கி வைத்துள்ளது. அதனால், பல பள்ளிகள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலையில் உள்ளன.
இது குறித்து, தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்க பொதுச்செயலர், நந்தகுமார் கூறியதாவது: முதல் கட்டமாக, 124 கோடி ரூபாய் தருவதாக அரசு அறிவித்துள்ளது. அந்த நிதி இன்னும் பள்ளிகளுக்கு கிடைக்கவில்லை. கோடை விடுமுறைக்குள், பாக்கி தொகையை தர வேண்டும். இல்லையெனில், இலவச அட்மிஷன் வழங்க முடியாத நிலை ஏற்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை