Ad Code

Responsive Advertisement

ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பம் மூலம் ரூ.33½ கோடி வருமானம் தேர்வு வாரியத்துக்கு கிடைத்தது.


ஆசிரியர் தகுதி தேர்வுக்கு கடந்த மாதம் 6–ந் தேதி தமிழ்நாடுமுழுவதும் ஏராளமான பள்ளிகளில் விண்ணப்ப படிவம் வழங்கும்பணி தொடங்கியது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைசமர்ப்பிக்க கடந்த மாதம் 23–ந் தேதி கடைசி நாள் ஆகும்.

  பிளஸ்–2 முடித்துவிட்டு ஆசிரியர் பயிற்சி முடித்த 2 லட்சத்து 37ஆயிரத்து 293 பேரும், பி.எட் படித்த பட்டதாரிகள் 5 லட்சத்து 2ஆயிரத்து 964 பேரும் பூர்த்தி செய்த விண்ணப்பங்களைசமர்ப்பித்தனர். மொத்தம் 7 லட்சத்து 40 ஆயிரத்து 257பேர்இந்த தேர்வுக்கு விண்ணப்பித்து உள்ளனர். இவர்களுக்குஆசிரியர் தகுதி தேர்வு 29, 30–ந் தேதிகளில் நடைபெற உள்ளது.

ரூ.33½ கோடி வருமானம்

தற்போது மனுக்கள் பரிசீலனை நடைபெற்று வருகிறது.பரிசீலனைக்கு பிறகு அவர்கள் தேர்வு எழுத அனுமதிச்சீட்டுதயாரித்து இணையதளத்தில் வெளியிடப்படும். மேலும் எத்தனைதேர்வு மையங்களை அமைப்பது என்றும் தற்போது ஆலோசனைநடந்து வருகிறது.ஆசிரியர் தகுதி தேர்வுக்கான விண்ணப்ப படிவத்துடன் தேர்வுகட்டணமாக ரூ.500–ஐ வரைவோலையாக அனுப்பஅறிவுறுத்தப்பட்டது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்ரூ.250–ஐ வரைவோலையாக அனுப்ப சலுகை வழங்கப்பட்டது.மொத்த விண்ணப்பதாரர்களில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் ஆவர். இவர்கள்மூலம் ரூ.3½ கோடி வருமானம் கிடைத்தது.

இவர்களை தவிர 6லட்சத்து 257 பேரின் விண்ணப்பம் மூலம் ரூ.30 கோடியே 1லட்சத்து 28 ஆயிரத்து 500 வருமானமாக கிடைத்தது. மொத்தத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு ரூ.33½ கோடி வருமானம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement