200 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு பழைய 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாமல் போனது. இதையடுத்து புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடித்து புழக்கத்தில் விடப்பட்டது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு புழக்கத்தில் இருந்த பணத்தை குறைத்து டிஜிடல் பணப்பரிவர்தனையை அரசு ஊக்குவிக்கத் தொடங்கியது.
இந்நிலையில், மத்திய ரிசர்வ் வங்கிக்குழு, புதிய 200 ரூபாய் நோட்டுக்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரிசர்வ் வங்கிக்குழு உறுப்பினர்கள் மூலம் வெளியாகியுள்ள இந்த தகவல், கூடிய விரைவில் கவர்னர் மூலம் உறுதி செய்யப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய 200 ரூபாய் நோட்டுக்கான திட்டம் உறுதி செய்யப்பட்டவுடன், வரும் ஜூன் மாதம் முதல் நோட்டுகளை அச்சிடும் பணிகள் தொடங்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை