வாட்ஸ் ஆப்பில் பொருட்களை ஆர்டர் செய்து வாங்கும் வசதியை தொடங்க உள்ளதாக இத்தாலியைச் சேர்ந்த பிரபல நிறுவனம்
தெரிவித்துள்ளது.
இன்று சமூக வலைதளங்களில் பிரபலமான வாட்ஸ் ஆப்பை பயன்படுத்தாத இளைஞர்கள் யாரும் இல்லை. வாட்ஸ் ஆப் பயன்படுத்துவதற்காகவே ஸ்மார்ட்போன் வாங்குபவர்களும் உண்டு. அந்த வகையில், இந்தியாவில் மட்டும் 20 கோடி வாடிக்கையாளர்களை கொண்ட வாட்ஸ் ஆப்பில் பொருட்களை ஆர்டர் செய்து வாங்கும் வசதியை அறிமுகப்படுத்தவுள்ளதாக யூக்ஸ் நெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மிலன் நகரைச் சேர்ந்த யூக்ஸ் நெட் நிறுவனம், ஆடம்பர பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், வாட்ஸ் ஆப் மூலம் தங்கள் நிறுவன பொருட்களை விற்கும் வசதியை ஏற்படுத்த உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் தங்கள் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அந்நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ஃபெடரிகோ மார்செட்டி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வாட்ஸ் ஆப் பாஃர் பிசினஸ் என பெயரிடப்பட்ட இந்த புதிய வசதி, இந்தியாவில் உள்ள சிறு மற்றும் குறு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து, விரைவில் செயல்படுத்தப்படும் என வாட்ஸ் ஆப் நிறுவனத்தின் இணை நிறுவனரான பிரையன் ஆக்டன் தெரிவித்துள்ளார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை