
இந்தியாவில், கடந்த, 20 ஆண்டு களாக, வேலைவாய்ப்பை அள்ளி வழங்கிய, ஐ.டி., எனப்படும் தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு மற்றும் வங்கித்துறை களில், 15 லட்சம் பேர் வேலையிழக்கும் ஆபத்து இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்தியாவில், 1991க்கு பின் பொருளாதார சீர்த்திருங்கள் மேற்கொள்ளப்பட்ட பின், ஐ.டி., எனப்படும் தகவல் தொழில்நுட்பம், தொலைத் தொடர்பு மற்றும் வங்கித்துறைகளில், பெருமளவு வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது.
'ஒயிட் காலர் ஜாப்' எனப்படும், உயர் கல்வி கற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் துறை கள் வளர்ச்சி கண்டன; இதனால் படித்து பட்டம் பெற்ற லட்சக்கணக்கான இளைஞர்கள், தனியார் துறைகளில் அதிக அளவில் வேலை வாய்ப்பு பெற்று வந்தனர்.
உற்பத்தித்துறை
எனினும், உலகளாவிய பொருளாதார சூழ லால், இந்தியாவில் சில ஆண்டுகளாக வேலை வாய்ப்பு குறைந்து வருகிறது.
குறிப்பாக உற்பத்தித் துறை சார்ந்த வேலை வாய்ப்புகள், கடந்த இரண்டு ஆண்டுகளில்
குறைந்துள்ளன; இதனால், ஆயிரக்கணக் கானோர் வேலையிழந்து வருகின்றனர்.
இந்நிலையில், ஐ.டி., தொலைத்தொடர்பு, வங்கி மற்றும் நிதித்துறை சார்ந்த சேவை பணிகளில் பெருமளவு வேலைவாய்ப்புகள் குறையும் என தெரிய வந்துள்ளது. பெரிய அளவில் பாதிப்புமத்திய புள்ளி விபரங்கள் அமைப்பின் தகவலை சுட்டிக் காட்டி, வேலைவாய்ப்பு ஆய்வறிக்கை கூறியுள்ளதாவது:
மக்களிடையே செலவு செய்யும் வாய்ப்பு குறைந்து வருவதால், சேவை துறைகளில் அதன் பாதிப்பு எதிரொலிக்கிறது; இதனால், சேவை சார்ந்த, ஐ.டி., வங்கி சேவை உள்ளிட்டவை, மிகப் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்து வருகின்றன.இதனால், ஏராள மானோர் வேலையிழக்கும் சூழல் தற்போது உரு வாகி வருகிறது. வருங்காலத்தில், இத்துறை சார்ந்த, 15 லட்சம் பேர் வேலையிழக்கும் ஆபத்து உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை