Ad Code

Responsive Advertisement

500 ரூபாய் நோட்டை அச்சடிக்கும் பணி இரட்டிப்பு: புரளியை நம்ப வேண்டாம்: ஆர்பிஐ



500 ரூபாய் நோட்டுகள் கடந்த ஒரு சில நாட்களாகத்தான் புழக்கத்துக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால் டிசம்பர் மாதத் துவக்கத்தில் கடுமையான பணத் தட்டுப்பாடு ஏற்படும் என்று புரளி பரவுகிறது. ஆனால், 500 ரூபாய் நோட்டுகள் போதுமான அளவுக்கு வந்து கொண்டிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், 500 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணி இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. எனவே, புரளிகளை நம்ப வேண்டாம் என்று ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா அறிவுறுத்தியுள்ளது.




500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பினால், 500 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் முற்றிலுமாக நின்றது. இதனால், மக்களின் பணப் பரிமாற்றம், பொருட்களை வாங்குதல் போன்றவை பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. 2000 ரூபாய்க்கு சில்லறை கிடைப்பது பெரும் சிரமமாக இருந்தது.

ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்குப் பிறகு சுமார் 20 நாட்களுக்குப் பின், ஒரு சில ஏடிஎம்களில் 500 ரூபாய் நோட்டுகள் வழங்கப்பட்டன. ஆனால், அவையும் போதிய அளவில் இல்லை.

அதே சமயம் சில 500 ரூபாய் நோட்டுகள் சரியாக பிரிண்ட் ஆகாததாலும் மக்களுக்கு பீதி ஏற்பட்டது.

இந்த நிலையில்தான், ஆர்பியை விளக்கம் அளித்துள்ளது. அதாவது, இந்தியாவில் சுமார் 1,660 கோடி மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டிருப்பதாகவும், இந்தியாவில் தற்போது ரூ.8.3 லட்சம் கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாகவும் கூறியுள்ளது.

தற்போது 2000 ரூபாய் நோட்டுக்குப் பதிலாக 500 ரூபாய் நோட்டுகளே வங்கிகளுக்கு அதிகம் வந்து கொண்டிருப்பதாகவும் வங்கி அதிகாரிகளும் கூறியுள்ளனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement