வங்கிகளில் தேவையான அளவுக்கு பணம் இருப்பு உள்ளதால், மக்கள் அச்சப்பட வேண்டாம்' என, இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. பழைய, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற, வங்கிகளில் மக்கள் குவிந்துள்ளனர். இரண்டாம் நாளாக, நேற்றும் கூட்டம் குறையவில்லை.
இந்நிலையில், ரிசர்வ் வங்கி முதன்மை ஆலோசகர், அல்பனா கிலாவாலா வெளியிட்ட அறிவிப்பு: வங்கிகளில் பழைய, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற, தேவையான அளவுக்கு, ரிசர்வ் வங்கியில் இருந்து பணம் அனுப்பப்பட்டுள்ளது. அனைத்து வங்கிகளிலும், தேவையான அளவுக்கு பணம் உள்ளது. எனவே, பழைய நோட்டு வைத்திருப்பவர்களும், வங்கி கணக்குதாரர்களும், அச்சம் கொள்ள வேண்டாம்; பொறுமையாக மாற்றிக் கொள்ளவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முதியோர், பெண்களுக்கு எஸ்.பி.ஐ.,யில் தனி வரிசை : பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற, பெண்களும், முதியோரும் வரிசையில் நிற்க வேண்டியுள்ளது. எனவே, அனைத்து பாரத ஸ்டேட் வங்கி கிளைகளிலும், பெண்கள், முதியவர்களுக்கு, தனி வரிசை அமைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. 'இன்று முதல், அவர்களுக்கு தனி கவுன்டர்கள் செயல்படும்' என, எஸ்.பி.ஐ., அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை