தெலுங்கானாவில், அரசு பணியாளர் தேர்வு எழுதுவோர், வாட்ச், ஷூ அணிந்து செல்லவும், பர்ஸ் எடுத்துச் செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. இங்கு, விரைவில் அரசு பணியாளர் தேர்வு நடக்கவுள்ளது; எட்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர், இந்த தேர்வை எழுத உள்ளனர்.
தேர்வு எழுதுவோருக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து, மாநில அரசு பணியாளர் தேர்வாணையம், வெளியிட்டுள்ள அறிக்கை: தேர்வு அறைக்கு, மொபைல் போன், கால்குலேட்டர் உட்பட, மின்னணு பொருட்களை எடுத்து வரக் கூடாது; வாட்ச், ஷூ அணிந்து வரவும், பர்ஸ் எடுத்து வரவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது; உடலில், 'டாட்டூ' வரைந்திருக்க கூடாது. பெண்கள், தங்க நகைகள் அணிந்து வரவும், கைகளில் மருதாணி வைத்து வரவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை