அனைத்து அரசு துறை சேவைகளையும், ஒருங்கிணைக்கும் மொபைல், 'ஆப்'பை, 2017 மார்ச்சில், மத்திய அரசு அறிமுகம் செய்தது. பாஸ்போர்ட் சேவை, நிலம் தொடர்பான ஆவணப்பதிவுகள், வருமான வரி, இ - போஸ்ட், பெண்கள் பாதுகாப்பு, உதவித்தொகை உள்ளிட்ட, 200க்கும் மேற்பட்ட, மத்திய அரசு சேவைகளை ஒருங்கிணைக்கும் வகையில், மொபைல், 'மாஸ்டர் ஆப்'பை, அரசு தயாரித்து வருகிறது. இந்த, 'ஆப்' அடுத்தாண்டு மார்ச்சில் பயன்பாட்டுக்கு வரும்.
மின்னணுவியல் சேவை : மத்திய அரசு, 'இ - கவர்னன்ஸ்' எனப்படும், மின்னணுவியல் முறை நிர்வாக நடவடிக்கைகளின் கீழ், 'மைகவ்.இன்' என்ற இணையதளத்தை துவக்கி உள்ளது. அரசின் பல்வேறு கொள்கைகள் உருவாக்கலில், பொதுமக்கள் ஈடுபாட்டுடன் பங்கேற்க வேண்டும் என்ற நோக்கத்துடன், இந்த இணையதளம் செயல்படுகிறது. அதே போன்று, அரசின் மின்னணுவியல் சேவைகள் தொடர்பான, மக்களின் கருத்துக்களை பெறும் வகையில், அதிவிரைவு மதிப்பீடு முறை அடிப்படையில், மற்றொரு இணையதளத்தை உருவாக்க, அரசு திட்டமிட்டு உள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை