Ad Code

Responsive Advertisement

கல்வி உதவித்தொகை: அவகாசம் நீட்டிப்பு

சிறுபான்மையின மாணவ, மாணவியர், கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க, நவ., 30 வரை, அவகாசம் தரப்பட்டு உள்ளது. தமிழகத்தில், அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில், முதல் வகுப்பு முதல், பிஎச்.டி., படிப்பு வரை படிக்கும், சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.



முஸ்லிம், கிறிஸ்தவ, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் மதங்களைச் சேர்ந்த, மாணவ, மாணவியர் பயன்பெறலாம். தகுதி மற்றும் வருவாய் அடிப்படையில் கல்வி உதவித்தொகைக்கு, www.scholarships.gov.in என்ற இணையதளத்தின் வழியே விண்ணப்பிக்கலாம். இதற்கான அவகாசம், நவ., 30 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement