மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் கல்லூரிகளுக்கு பாடத்திட்டம் மாற்றப்பட்டு புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. அந்த பாடத்திட்டம் அடுத்த கல்வி (2017-2018) ஆண்டில் இருந்து அமலுக்கு வருகிறது.
புதிய பாடத்திட்டம்
புதிய பாடத்திட்டம் மாற்றம் குறித்து அண்ணாபல்கலைக்கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது.
வேலை வாய்ப்பு அளிக்கும்
பாடத்திட்டம் தயாரிக்கும் பணியில் 900 ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். ஏற்கனவே உள்ள பாடத்துடன், புதிய தொழில்நுட்பம், தொழிற்சாலைகளுக்கு தேவையானவை, வேலைவாய்ப்பு ஆகியவற்றை கொண்ட பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படுகிறது. இந்த புதிய பாடத்திட்டம் தரமாக இருக்கும்.பி.இ. படிப்பில் மெக்கானிக்கல், சிவில், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன்ஸ் உள்ளிட்ட அனைத்து பாடப்பிரிவுகளும் மாற்றப்படுவதற்கான வேலை நடந்து வருகிறது. பி.இ. என்ற இளநிலை பட்டப்படிப்புக்கு 41 தலைப்புகளிலும், எம்.இ. என்ற முதுநிலை பட்டப்படிப்புக்கு 57 தலைப்புகளும் வர உள்ளது. இந்த படிப்பு மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப படிக்கும்கல்வியாக இருக்கும்.
விரும்புவதை எடுத்து படிக்கும் மாணவர்கள்
உதாரணமாக மாணவர்கள் மெக்கானிக்கல் படித்தால் அவர்கள்விரும்பினால் சிவில் பாடத்தின் ஒரு பகுதியையும் எடுத்து படிக்கலாம். இந்த முறை புதிய பாடத்திட்டத்துடன் சேர்ந்து அமல்படுத்தப்படுகிறது. அதாவது முழுக்க முழுக்க பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு ஆகியவற்றின் விதிமுறைகளின் படி மாற்றி அமைக்கப்படுகிறது. இந்த பாடத்திட்டம் 2017-2018-ம் ஆண்டு அமல்படுத்தப்படும். அதாவது அந்த (2017-2018) வருடம் பி.இ. சேரும் மாணவர்களுக்கு கொண்டுவரப்படுகிறது.
இந்த புதிய பாடத்திட்டம் சிண்டிகேட், செனட் அனுமதி பெற்று அமல்படுத்தப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை