அரசு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுமுறை காலத்தை 6 மாதத்தில் இருந்து 9 மாதமாக உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டது.
இதுதொடர்பாக தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை செயலாளர் எஸ்.சுவர்ணா வெளியிட்டுள்ள அரசாணையில் (அரசாணை எண் 105, நாள் 7.11.2016) கூறியிருப்பதாவது:-
அரசு பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுமுறை 6 மாதத்தில் இருந்து 9 மாதமாக உயர்த்தப்படும் என்று தமிழக முதல்வர் கடந்த 1.9.2016 அன்று சட்டப்பேரவையில் பேரவை விதி 110-ன் கீழ் அறிவித்தார். அவரது அறிவிப்பின் பேரில், பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுமுறை காலம் 6 மாதத்தில் (180 நாட்கள்) இருந்து 9 மாதமாக (270 நாட்கள்) முழு சம்பளத்துடன் உயர்த்த ஆணை பிறப்பிக்கப்படுகிறது.
இந்த அரசாணை வெளியிடப்படுவதற்கு முன்னர் (7.11.2016) மகப்பேறு விடுமுறையில் இருக்கும் ஊழியர்கள் 9 மாதம் வரை விடுமுறை எடுத்துக்கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை செயலாளர் எஸ்.சுவர்ணா வெளியிட்டுள்ள அரசாணையில் (அரசாணை எண் 105, நாள் 7.11.2016) கூறியிருப்பதாவது:-
அரசு பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுமுறை 6 மாதத்தில் இருந்து 9 மாதமாக உயர்த்தப்படும் என்று தமிழக முதல்வர் கடந்த 1.9.2016 அன்று சட்டப்பேரவையில் பேரவை விதி 110-ன் கீழ் அறிவித்தார். அவரது அறிவிப்பின் பேரில், பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுமுறை காலம் 6 மாதத்தில் (180 நாட்கள்) இருந்து 9 மாதமாக (270 நாட்கள்) முழு சம்பளத்துடன் உயர்த்த ஆணை பிறப்பிக்கப்படுகிறது.
இந்த அரசாணை வெளியிடப்படுவதற்கு முன்னர் (7.11.2016) மகப்பேறு விடுமுறையில் இருக்கும் ஊழியர்கள் 9 மாதம் வரை விடுமுறை எடுத்துக்கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை