அரசு பள்ளிகளில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில், தேர்ச்சி விகிதம் அதிகரிப்பது தொடர்பாக, அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கருத்தாய்வு கூட்டம், நேற்று நடந்தது. இதில், பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன் பேசியதாவது:
கடந்த ஆண்டு பொதுத்தேர்வை எதிர்கொண்ட, கிராமப்புற மாணவர்கள் எண்ணிக்கை, 10 லட்சம். தற்போது, இந்த எண்ணிக்கை, 13 லட்சமாக உயர்ந்துள்ளது. அரசு பள்ளிகளில் மாணவர் வருகையை அதிகரிக்க, பல்வேறு சலுகைகளை அரசு வழங்குகிறது.
ஆனால் பள்ளிகளில், ஒரு மாணவர், இரண்டு மாணவர் என, குறைவாக இருப்பதால், ஆசிரியர்கள் பாடம் நடத்தாமல் இருக்கக் கூடாது. துாத்துக்குடி மாவட்டத்தில், ஐந்து மாணவர்கள் மட்டுமே இருந்த ஒரு அரசு பள்ளியில், கணினி மூலம் பாடம் நடத்தியதால், தற்போது, 20க்கும் அதிகமாக, மாணவர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
தரமான கல்வியை வழங்குவதன் மூலம் தனியார் பள்ளி மாணவர்களும், அரசு பள்ளிகளை நோக்கி வரும் நிலையை ஏற்படுத்த வேண்டும். அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தையும் அதிகரிக்க வேண்டும். ஆசிரியர்கள், தலைமை ஆசிரியருடன் ஒன்றுபட்டு பணியாற்ற வேண்டும்.பள்ளிகளில், மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவில், அடுத்த கல்வி ஆண்டு முதல் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.இவ்வாறு அவர் பேசினார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை