'மாணவர் பரிமாற்ற திட்டம்' என்ற பெயரில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 'வாழ்க்கை கல்வி' கற்பிக்கப்பட உள்ளது. கிராமங்களில் உள்ள ஒற்றுமை, கலாசாரம், பண்பாடு, பாரம்பரிய விழாக்கள், கோயில் விழாக்கள் உள்ளிட்ட வாழ்க்கை கல்வி குறித்து, நகர்புற மாணவர்கள் அறிவதற்காக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அதே போல், கிராமப்புற மாணவர்கள் நகரங்களில் உள்ள பள்ளிகளுக்கு அனுப்பப்படுவர்.
நகரங்களை பற்றி அறியவும், பள்ளிகளில் உள்ள வசதிகள், கற்பிக்கும் முறை, தொழிற்கூடங்கள், நகர்புற வாழ்க்கை முறையை அறியவும், தாழ்வு மனப்பான்மையை போக்கவும் இத்திட்டம் உதவும்.
ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஒரு நகர்புற பள்ளி, ஒரு கிராமப் பள்ளி தேர்வு செய்யப்பட உள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் 20 மாணவர்கள், இரண்டு ஆசிரியர் வீதம் பரிமாற்றம் செய்யப்படுவர். இவர்கள் ஆறு நாட்கள் அங்கு தங்கி இருப்பர். இத்திட்டத்திற்காக பள்ளிகளை தேர்வு செய்யும் பணி நடக்கிறது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை