வரும் கல்வி ஆண்டிலாவது, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளுக்கான, கல்வி கட்டணத்தை நிர்ணயிக்கவேண்டும்' என, பல்கலை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது
தமிழகத்தில், 87 அரசு கல்லுாரிகள், 162 அரசு உதவி பெறும் கல்லுாரிகள் மற்றும், 1,178 சுயநிதி கல்லுாரிகள் என, மொத்தம், 1,464 கலை, அறிவியல்மற்றும் ஆசிரியர் கல்வியியல் கல்லுாரிகள் உள்ளன. மேலும், 600க்கும் மேற்பட்ட இன்ஜி., மற்றும் ஆர்கிடெக்ட் கல்லுாரிகளும் செயல்படுகின்றன.
இவற்றில், இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கும், ஆசிரியர் கல்வியியல் கல்லுாரிகளுக்கும், அரசு அமைத்த நீதிபதி பாலசுப்பிரமணியன் கமிட்டி, கல்வி கட்டணத்தை நிர்ணயித்துஉள்ளது. ஆனால், 500க்கும் மேற்பட்ட கலை, அறிவியல் கல்லுாரிகளுக்கு, இதுவரைகட்டணம் நிர்ணயிக்கவில்லை. இதனால், கல்லுாரிகள், தங்கள் விருப்பம் போல,பல லட்சம் ரூபாய் வரை, கட்டணம் வசூலிப்பதாக, புகார் எழுந்துள்ளது.
இது குறித்து, அனைத்து பல்கலை ஆசிரியர் சங்க பொதுச்செயலர் என்.பசுபதி கூறியதாவது:'கலை, அறிவியல் கல்லுாரிகளுக்கும், கல்வி கட்டணம் நிர்ணயிக்க வேண்டும்' என, நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை தமிழக அரசு இன்னும் அமல்படுத்தவில்லை. அடுத்த கல்வி ஆண்டிலாவது, கல்வி கட்டணம் நிர்ணயிக்க, நீதிபதி பாலசுப்பிரமணியன் கமிட்டிக்கு, உயர் கல்வித்துறை பரிந்துரைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை