தமிழ்நாடு பாடநுால் கழகத்தில், 'ஆன்லைன்' புத்தக விற்பனையில் தொடர்ந்து குளறுபடி நிலவுவதால், புத்தகத்திற்கு பதிவு செய்த மாணவர்கள் அவதிக்கு ஆளாகின்றனர்.தமிழ்நாடு பாடநுால் மற்றும் சேவை பணிகள் கழகம், சமச்சீர் கல்வி புத்தகங்களை அச்சிட்டு வழங்குகிறது.
பணம் செலுத்தியதும், புத்தகம் பதிவு செய்வோரின் இ - மெயில் முகவரிக்கு ரசீது வந்துவிடும்; இரண்டு நாட்களில், உரியமுகவரிக்கு புத்தகம் வந்து சேரும்.முதலில் சுறுசுறுப்பாக செயல்பட்ட இத்திட்டத்தில் தற்போது, சுணக்கம் ஏற்பட்டுள்ளது. பதிவு செய்தால், புத்தகங்கள் கிடைக்க ஒரு வாரம் வரை ஆகிறது.
இது, மாணவர்கள் மத்தியில்அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. புத்தகம் பதிவு செய்தோர், தங்களுக்கு வர வேண்டிய புத்தகத்தின் நிலையை அறிய, பாடநுால் கழகத்தில் விசாரிக்க, விற்பனை பிரிவு உதவி இயக்குனர், 044 - 2821 5351; புத்தக பதிவு ரசீதில் உள்ள, 044 - 2827 5851 உள்ளிட்ட பல எண்கள் தரப்பட்டுள்ளன.இந்த எண்களை தொடர்பு கொண்டாலும், யாரும் பதில் தராததால் மாணவர்கள்தவிக்கின்றனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை