'அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய, ஏழாவது ஊதிய குழு அமைக்க வேண்டும்' என, அரசு பள்ளிதலைமை ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் சங்க தலைவர், சாமி சத்தியமூர்த்தி, முதல்வர் தனிப்பிரிவுக்கு அளித்துள்ள மனு:
தற்போதுள்ள ஊதிய முரண்பாடுகளை களைந்து, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். அதற்காக, ஏழாவது ஊதியக் குழு அமைக்க வேண்டும். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும், பழைய பொது ஓய்வூதிய திட்டம் கொண்டு வர வேண்டும். மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை ஆராய கல்வியாளர் மற்றும்ஆசிரியர்களை கொண்ட கமிட்டி அமைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை