காதுகளில் குடைச்சலை ஏற்படுத்தும் வாகனங்களின் இரைச்சலை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என களஆய்வு மூலம் கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர், மதுரை ஒத்தக்கடை அரசு தொடக்கப் பள்ளி மாணவர்கள்.
முதற்கட்டமாக, எவ்வகை வாகனங்கள் இந்த ரோட்டில் அதிகம்செல்கின்றன. எந்த வாகனங்களில் ஒலி மாசு ஏற்படும் வகையில் சத்தம் காதை கிழிக்கிறது போன்ற விஷயங்களை சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் களஆய்வில் மாணவர்கள் ஈடுபட்டனர்.இதில் ஒவ்வொரு வாகனங்களில் இருந்து வெளியாகும் ஒலியின் டெசிபல் அளவு கணக்கிடப்பட்டது.பெரும்பாலான தனியார் பஸ்கள், வேன்களில் தான் ஹாரன் சத்தம் அங்கீகரிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருந்தது.
டூவீலர்களில் காதுகளை குடையும் வகையிலும் விதவித ஹாரன் கருவிகள் பொருத்தப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.தலைமையாசிரியர் தென்னவன் கூறியதாவது: எங்கள் பள்ளி மாணவர்களுக்கு ஏற்பட்ட பிரச்னை அடிப்படையில் இக்கள ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ரோடுகளில் செல்லும் வாகனங்களில் 80 முதல் 100 டெசிபல் உள்ளதால் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது. இதில் அதிகபட்ச ஒலி மாசை குறைக்கும் வகையில் ஊராட்சி நிர்வாகத்திற்கு சில பரிந்துரைகளை தெரிவித்துள்ளோம்.
அதில், அதிக மரங்களை நடுவது, சத்தத்தை கட்டுப்படுத்தும் தாவரங்களை வளர்ப்பது, ஒலித்தடை ஏற்படுத்தும் கட்டமைப்பு, அருகில் செல்லும் இடங்களுக்கு வாகனங்களை பயன்படுத்துவதை தவிர்ப்பது, பள்ளி வேலை நாட்களில் ஊராட்சிக்குள் ஒலித்தடை ஏற்படுத்துவது போன்றவற்றை வலியுறுத்தியுள்ளோம். மக்களிடையே இதுகுறித்து மாணவர்கள் மூலம் விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறோம், என்றார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை