'அரசு பள்ளி ஆசிரியர்கள் பேட்டி அளித்தால், நடவடிக்கை எடுக்கப்படும்' என, அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.
இதனால், சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகள் மீது, உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்கின்றனர். இதை கருத்தில் கொண்டு, ஆசிரியர்களை கட்டுப்படுத்த, மாவட்ட அதிகாரிகள் புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.
* ராமநாதபுரம் மாவட்டத்தில், 'வாட்ஸ் ஆப்' மூலம், தகவல்களை பரிமாறிய மூன்று ஆசிரியர்கள் மீது, கலெக்டரிடம் புகார் செய்து, முதன்மை கல்வி அதிகாரி நடவடிக்கை மேற்கொண்டார். பின், அந்த நடவடிக்கை உயரதிகாரிகளால் நிறுத்தப்பட்டது
* நீலகிரி மாவட்டத்தில், பல விதிமீறல்களுக்கு எதிராக, சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்ட, ஆசிரியர் சங்க தலைவர் ஒருவர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
தற்போது, திருப்பூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், புதிய உத்தரவு பிறப்பித்து உள்ளார். அதில், 'வேலை நேரத்தில், வெளியாட்களை பள்ளி வளாகத்திற்குள் அனுமதிக்கக் கூடாது. தலைமை ஆசிரியர்கள், உதவி ஆசிரியர்கள், வேலை நேரத்தில், பத்திரிகை நிருபர்களை சந்தித்து, பேட்டி தரக்கூடாது; மீறினால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என, குறிப்பிட்டு உள்ளார். இது போன்ற நடவடிக்கைகளால் அதிருப்தியடைந்துள்ள ஆசிரியர் சங்கங்கள், இப்பிரச்னை குறித்து, விரைவில் கூடி ஆலோசனை நடத்த உள்ளன.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை