"அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" - யின் சிறப்பு மாநில பொதுக்குழு கூட்டம் 11.09.2016 அன்று மதுரை மாவட்டம் மேலூர் நகரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரவையின் நிறுவனத் தலைவர் பாவலர் திரு.குகானந்தம் அவர்கள் தலைமை ஏற்றார். பல்வேறு மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துக்கொண்டார்கள். கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு குறித்து நெடுநேரம் விவாதிக்கப்பட்டது.
இறுதியாக நிறுவனத் தலைவர் பாவலர் திரு.குகானந்தம், தலைமை நிலைய பொறுப்பாளர்கள் திரு.மோகன், திரு.லட்சுமணன் திரு. ஜான் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஏகமனதாக புதிய நிர்வாகிகளை தேர்தெடுத்தனர். அதன்படி
மாநிலப் பொதுசெயலாளர் திரு.பெ.கிருஷ்ணமூர்த்தி., M.A.,B.Ed அவர்கள் ( வேலூர் மாவட்டம் )
மாநில தலைவர் திரு.பெ.பரமசாமி M.A.,M.Ed., அவர்கள் (தேனி மாவட்டம் )
மாநில பொருளாளர் திரு.சு.சீனிவாசன்., M.Sc., B.Ed அவர்கள் (தூத்துக்குடி மாவட்டம்)
இறுதியில் நன்றி கூறிய திரு.லட்சுமணன் அவர்கள், பேரவையை வளர்க்க புதிய நிர்வாகிகள் பாடுபடவேண்டும் எனவும், தலைமை நிலைய பொறுப்பாளர்களின் வழிகாட்டுதல்கள், ஒத்துழைப்பு நிர்வாகிகளுக்கு முழுமையாக இருக்கும் என கூறினார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை