தமிழகத்தில், 2011 முதல், அரசு பள்ளி மாணவர்களுக்கு, இலவச, 'லேப் - டாப்' வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும், பல கட்டங்களாக, 42.6 லட்சம் லேப் - டாப்கள் வழங்கப்பட்டன. சட்டசபை தேர்தல் அறிக்கையில், 'மாணவர்களுக்கு இலவசமாக, 'இன்டர்நெட்' இணைப்பு வழங்கப்படும்' என, அ.தி.மு.க., அறிவித்தது. தற்போது, ஆட்சிக்கு வந்த பின், இலவச இன்டர்நெட் பற்றி முடிவெடுப்பதில், தாமதம் ஏற்பட்டுஉள்ளது.
இதுகுறித்து, தகவல் தொழில்நுட்ப துறை அதிகாரிகள் கூறுகையில், 'இந்த ஆண்டில், ஐந்து லட்சத்து, 36 ஆயிரம், லேப் - டாப்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன; அதற்கான உத்தரவு, வெளியிடப்பட்டு உள்ளது' என்றனர். ஆனால், இதுவரை, 'டெண்டர்' கோரவில்லை; அதற்கான எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்பதால், இந்த கல்வியாண்டில், மாணவர்களுக்கு இலவச, லேப் - டாப் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை