வேலூர் மாவட்டம், கான்குப்பத்தை சேர்ந்தவர் மிஸ்லா (30). இவர், வேலூரில் தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளியில் இளநிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர், பணி மாறுதல் கேட்டு வேலூர் மாவட்ட கல்வி அதிகாரியிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்ைல.
அப்போது அதிகாரிகள் வேலூர் மாவட்ட கல்வி அதிகாரியிடம் மனு கொடுங்கள் என்று கூறியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த மிஸ்லா ஏற்கனவே தனது பையில் தயாராக எடுத்து வந்த 2 லிட்டர் பெட்ரோலை எடுத்து அலுவலகம் எதிரே தனது தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை சற்றும் எதிர்பார்க்காத அதிகாரிகள் அதிர்ச்சியடைந்து ஆசிரியையை மீட்டனர்.
மேலும் இதுகுறித்து அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி விரைந்து வந்த போலீசார் ஆசிரியை மிஸ்லாவை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று எச்சரித்து அனுப்பி வைத்தனர்.தமிழக முதல்வர் செல்லும் பாதையில் உள்ள அரசு அலுவலத்தில் இளநிலை ஆசிரியை ஒருவர் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை