பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட, மொபைல் போன், 'ஆப்' தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
பயன்படும் நவீன அறிவியல் மற்றும் தொழில் நுட்பம்' என்ற பெயரில், சர்வதேச மாநாடு நடந்தது; இதில், 2012ல், டில்லியில் ஓடும் பஸ்சில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுஉயிரிழந்த, மருத்துவ மாணவியின் பெற்றோர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இம்மாநாட்டில், 'ஐ பீல் சேப்' எனப்பெயரிடப்பட்ட, செயலி எனப்படும், மொபைல் போன், 'ஆப்' அறி முகம் செய்யப்பட்டது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இந்த, 'ஆப்' தயாரிக்கப் பட்டுள்ளது.
இதில் உள்ள சிறப்பு பட்டனை ஐந்து முறை அழுத்தினால், உடனடியாக, தேசிய அவசர கால எண், 100க்கு அழைப்பு செல்லும். பாதிப்புக்கு ஆளாகும் பெண் இருக்கும் இடம் பற்றிய தகவல், 30 விநாடிகளுக்குள் கண்டறியப்பட்டு, நடவடிக்கை
எடுக்கப்படும்.வன்முறையால் பாதிக்கப்படும் பெண்ணுக்கு சட்டரீதியிலான உதவிகளை அளிக்கும் வகையில், நிர்பயா ஜோதி அறக் கட்டளை துவங்கப்பட்டுள்ளது. இந்த அறக் கட்டளையும், இந்திய மொபைல் போன் தரக் கூட்டமைப்பும் சேர்ந்து, 'ஐ பீல் சேப்' மொபைல், 'ஆப்'பைஉருவாக்கி உள்ளன.

0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை