திருவண்ணாமலை மாவட்ட தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரிந்து வந்த 83 இடைநிலை ஆசிரியர்கள், வெளி மாவட்டங்களுக்கு இடமாறுதல் பெற்றனர்.
திருவண்ணாமலை டேனிஸ் மிஷன் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் மேற்பார்வையில் இணையதளம் வாயிலான கலந்தாய்வு நடைபெற்றது. இதில், திருவண்ணாமலை மாவட்ட தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் 292 இடைநிலை ஆசிரியர்கள் தங்களது சொந்த மாவட்டங்களுக்குச் செல்ல விரும்பி கலந்தாய்வில் கலந்துகொண்டனர். இவர்களில் 83 பேருக்கு மட்டுமே தாங்கள் விரும்பிய மாவட்டத்துக்கு இடமாறுதல் கிடைத்தது. இதையடுத்து, 83 பேரும் இடமாறுதல் பெற்றனர். பெரும்பாலான ஆசிரியர்கள் புதுக்கோட்டை, கடலூர், வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களுக்கு இடமாறுதல் பெற்றுச் சென்றனர். இவர்களுக்கு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் இடமாறுதல் ஆணைகளை வழங்கினார்.
22 பேர் திருவண்ணாமலை வருகை: இதேபோல, இதர மாவட்டங்களில் இருந்து திருவண்ணாமலை மாவட்டத்துக்கு 22 ஆசிரியர்கள் இடமாறுதல் பெற்றுள்ளனர். இவர்கள் ஓரிரு நாளில் திருவண்ணாமலை மாவட்ட பள்ளிகளில் பணியில் சேர்வார்கள் என்று கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை