திறன் மேம்பாட்டில் மாணவரின் குறைகள் என்ன?
அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் இரண்டு முதல் எட்டாம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களின் அடிப்படை திறன் மேம்பாட்டில் குறைபாடுகள் என்னென்ன உள்ளது என்பதை கண்டறியும், பிரத்யேக ஆய்வுப் பணிகள் இம்மாதம் துவக்க மாநில திட்ட இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி,முதல்கட்ட ஆய்வு பணியை,ஜூலை,ஆகஸ்ட் மாதங்களில்இரண்டு பிரிவாகவும்,இரண்டாம் கட்ட ஆய்வு பணியை பிப்.,மார்ச் மாதங்களில் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆய்வுகளின் போது,ஒவ்வொரு மாணவர்களின் தனித்தனி மதிப்பீட்டை ஆய்வு செய்து,திறன் முன்னேற்றம் குறித்து,பதிவுகள் பராமரித்து அதற்கேற்ப பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. நடப்பு கல்வியாண்டுக்கான பணிகள் துவக்கப்பட்டுள்ளது.
அதன்படி,ஜூலை,ஆக.,மாதங்களில் நடக்கும் ஆய்வுகளின் அறிக்கையை,செப்., 5க்குள்ளும்,பிப்.,மார்ச் ஆகிய மாதங்களில் நடைபெறும் ஆய்வுபணிக்கான அறிக்கையை,ஏப்., 5க்குள்ளும் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை