இந்த ஆண்டு புதிய நடைமுறை அறிமுகம்
ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பொது இடமாறுதல் கலந்தாய்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் புதிய நடைமுறை இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படுகிறது.
''நடப்பு கல்வி ஆண்டில் (2016-2017) ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள், கணினி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், தமிழாசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் ஆகியோருக்கு பொது இடமாறுதல் கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெற உள்ளது.
இடமாறுதலுக்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவுசெய்ய வேண்டும். எனவே, மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அதிகாரிகள் தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து மேல்நிலை, உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் தனி வட்டாட்சியர்களை (ஆதி திராவிடர் நலம்) அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்களை ஜூலை மாதம் 12-ம் தேதிக்குள் தங்கள் அலுவலுகத்துக்கு வந்து ஆன்லைனில் பதிவுசெய்துகொள்ளுமாறு அறிவுறுத்த வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை