பி.ஆர்க்., படிப்புக்கான விண்ணப்ப தேதி, ஜூலை, 9ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.அண்ணா பல்கலையின் இணைப்பிலுள்ள, 41 இன்ஜி., கல்லுாரிகளின் பி.ஆர்க்., படிப்பில், 2,400 இடங்களுக்கு, தேசிய, 'ஆர்கிடெக்' நுழைவு தேர்வு எனப்படும், 'நாட்டா' தேர்வு மதிப்பெண் மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கப்படுகின்றனர்.
இதில், 1,700 இடங்கள், அண்ணா பல்கலையின் கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படுகின்றன. இதற்கான, 'ஆன் - லைன்' விண்ணப்பபதிவு, ஜூன், 25ம் தேதி துவங்கி, கடந்த, 4ம் தேதியுடன் முடிந்தது. இந்நிலையில், விண்ணப்ப பதிவுக்கான கால அவகாசம், வரும், 9ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலையின், https://www.annauniv.edu/இணையதளத்தில், விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும்.
 
 
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை