தமிழகத்தில் பிளஸ் 2 பொது தேர்வை 8.33 லட்சம் மாணவர்கள் எழுதினார்கள். இவர்கள் எழுதிய விடைத்தாள்களை திருத்தும் பணியில் பல குளறுபடிகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் படி, தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவர் பிளஸ் 2ல் 1,181 மதிப்பெண் எடுத்திருந்தார். ஆங்கிலத்தில் 195 மதிப்பெண் எடுத்திருந்தார்.
ஆனால், அதே கேள்விக்கு வேறு மாணவர்களுக்கு சரி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த மாணவிக்கு ஒரு மதிப்ெபண் கிடைத்திருந்தால் 1182 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் 3வது இடம் ெபற்று இருப்பார். ஆனால், ஆசிரியர்களின் அலட்சியத்தால் 3ம் இடம் பெறும் வாய்ப்பு தவறியது.
இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்டத்தில் தனியார் பள்ளியில் பணிபுரியும் ஆங்கில முதுகலை ஆசிரியர் பாலு கூறியதாவது: விடைத்தாள்கள் திருத்தும் பணியில் குறைந்தது 3 ஆண்டுகளாவது அனுபவம் உள்ள ஆசிரியர்களையே நியமிக்க வேண்டும். ஆனால், எந்தவித அனுபவமும் இல்லாத ஆசிரியர்களை நியமிக்கின்றனர். இதனால், விடைத்தாள்கள் திருத்தும் பணியில் பல குளறுபடிகள் நடக்கின்றன. இவ்வாறு, தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவரின் விடைத்தாளில் அப்துல் கலாம் தொடர்பான ஒரு கேள்விக்கு சரியான பதிலை எழுதியிருந்தார். ஆனால், அதை தவறு என்று ஆசிரியர்கள் திருத்தியுள்ளனர். ஆனால், அதே பதில் எழுதியுள்ள வேறு மாணவர்களுக்கு சரி என்று குறிப்பிட்டுள்ளனர். உண்மையில் அந்த கேள்விக்கு மாணவி குறிப்பிட்ட பதில் சரி தான். இதனால், ஒரு மதிப்பெண் இழந்து மாவட்ட அளவில் 3வது இடம் பெறுவதற்கான வாய்ப்பை அந்த மாணவி இழந்துள்ளார்.
மாவட்ட நிர்வாகம் சார்பில் கிடைக்க வேண்டிய ஊக்க தொகை உள்ளிட்ட பல சலுகைகள், மாவட்ட அளவில் 3வது இடம் என்ற அங்கீகாரம் உள்ளிட்டவற்றை இழந்துள்ளார். இவ்வாறு, ஆசிரியர்களின் அலட்சியத்தால் பாதிக்கப்படுவது என்னவோ மாணவர்களின் எதிர்காலம்தான்.
எனவே, இனிவரும் காலங்களிலாவது அனுபவமுள்ள ஆசிரியர்களை நியமித்து விடைத்தாள்கள் திருத்தும் பணியை செம்மைப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை