பொறியியல் படிப்புகளுக்கான பொதுப் பிரிவு சேர்க்கை அடுத்த 10 நாள்களில் முடிவடைய உள்ள நிலையில், 40,524 இடங்களே இதுவரை நிரம்பியுள்ளன. இதனால் 1 லட்சத்து 44,772 பொறியியல் இடங்கள் மாணவர் சேர்க்கை இன்றி காலியாக உள்ளன.
கலந்தாய்வு தொடங்கும்போது மொத்தம் 1 லட்சத்து 85,296 பி.இ. இடங்கள் இடம்பெற்றிருந்தன. ஞாயிற்றுக்கிழமை வரை அழைக்கப்பட்ட 58,175 பேரில், 40,524 பேர் இடங்களைத் தேர்வு செய்து கல்லூரி சேர்க்கைக் கடிதங்களைப் பெற்றுச் சென்றுள்ளனர். 17,444 பேர் கலந்தாய்வுக்கு வரவில்லை. 207 பேர் கலந்தாய்வில் பங்கேற்றபோதும், இடங்களைத் தேர்வு செய்வதைத் தவிர்த்துவிட்டனர்.
அடுத்த 10 நாள்களில் இந்த பொதுப் பிரிவினருக்கான சேர்க்கை முடிவடைய உள்ள நிலையில், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 1 லட்சத்து 41,717 இடங்கள், அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் 2,824 இடங்கள், அரசு, அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகளில் 231 இடங்கள் என மொத்தம் 1,44,772 இடங்கள் சேர்க்கை இன்றி காலியாக உள்ளன.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் கூறுகையில், கலந்தாய்வின் அடுத்த 10 நாள்களில் அதிகபட்சம் 40 ஆயிரம் இடங்கள் நிரம்ப வாய்ப்பு உள்ளது.
அதன் பிறகு, ஜூலை 23, 24 தேதிகளில் பிளஸ் 2 தொழில்பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கை, பின்னர் பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சேர்க்கை நடத்தப்படும். இதில் அதிகபட்சம் 5 ஆயிரம் இடங்கள் நிரம்பிவிடும்.
எனவே, கடந்த ஆண்டுகளைப் போலவே ஒட்டுமொத்த கலந்தாய்வின் முடிவில் 1 லட்சம் பி.இ. இடங்கள் மாணவர் சேர்க்கை இன்றி காலியாக இருக்க வாய்ப்பு உள்ளது என்றனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை