அரசு பணியாளர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை, 2020ம் ஆண்டு வரை நீட்டித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.கடந்த, 2012ல் இருந்து, நான்கு ஆண்டு காலத்திற்கு, யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம் மூலம், அரசு பணியாளர்களுக்காக செயல்பட்டு வந்த மருத்துவ காப்பீட்டு திட்டம், ஜூன், 30ம் தேதி முடிவடைந்தது.
அவை:
* நான்கு ஆண்டுகளுக்கு அரசு பணியாளர் குடும்பத்திற்கு அனுமதிக்கப்படும் மருத்துவ காப்பீட்டுத் தொகை, நான்கு லட்சம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது
* புற்றுநோய், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட, குறிப்பிட்ட சில சிகிச்சைகளுக்கு அனுமதிக்கப்படும் நிதி, 7.50 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது
* அரசு ஊழியரை முழுவதும் சார்ந்துள்ள, குறைந்தபட்சம், 40 சதவீத குறைபாடு கொண்ட மாற்றுத்திறனாளிகள், வயது வரம்புமின்றி, இத்திட்டத்தில் பயன்பெறலாம்
* இத்திட்டத்தின் கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்ட சிகிச்சைகளை, விபத்து காரணமாக, அவசர சிகிச்சையாக, அங்கீகரிக்கப்படாத மருத்துவமனையில் மேற்கொண்டாலும், பணியாளர் பயன்பெற முடியும்
* அரசு துறை, உள்ளாட்சி நிறுவனங்கள், அரசு பொதுத்துறை நிறுவனங்கள், சட்டப்படியான வாரியங்கள், மாநில அரசு பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றின் பணியாளர்கள் மற்றும் குடும்பத்தினர், நான்கு ஆண்டுகளுக்கு மருத்துவ காப்பீட்டு பலன்களை பெற முடியும்
* அரசு பணியாளர்கள் சந்தா தொகையாக, மாதம், 180 ரூபாய் செலுத்த வேண்டும். அரசு தன் பங்காக, 17.90 கோடி ரூபாயை ஆண்டுதோறும், காப்பீட்டு நிறுவனத்திற்கு வழங்கும்
* இத்திட்டம் மூலம், 10.22 லட்சம் அரசு பணியாளர் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பயன்பெறுவர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை