Ad Code

Responsive Advertisement

TNPSC:குரூப் 1, குரூப் 2 மற்றும் வி.ஏ.ஓ தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும்.

குரூப் 1, குரூப் 2 மற்றும் விஏஓ தேர்வு முடிவுகள் விரைவில் விரைவில் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் அருள்மொழி தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு வட்டார சுகாதார புள்ளியியல் துறையில் உள்ள 172 காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு இன்றுநடைபெற்றது.


இத்தேர்வை மாநிலம் முழுவதும் சுமார்  12,000 பேர் எழுதினர்.கோவை, ஆர்.எஸ்.புரம் பகுதியிலுள்ள அம்மனியம்மாள் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த மையத்தை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் அருள்மொழி ஆய்வு செய்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது நடைபெறும் குரூப் தேர்வுகள் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களின் நேரடிக் கண்காணிப்பில் நம்பகத்தன்மையுடன் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.



குரூப் 1, குரூப் 2 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கான முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அருள்மொழி கூறினார். ஜூன் மாதம் நடத்தப்பட்டகுரூப் ஒன் தேர்வு முடிவுகள் தாமதமாவதற்கு சென்னையில் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்பே காரணம் என்றும் கூறினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement