அனைத்து பி.எட்., கல்லூரிகளிலும், உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளனவா என, மத்திய குழுவினர் சோதனை நடத்த உள்ளனர். தமிழகத்தில், 690 பி.எட்., கல்லூரிகளுக்கு, தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த கல்லூரிகளுக்கு, தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலை, இணைப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
கடந்த, 2015 வரை, ஓராண்டு படிப்பாக பி.எட்., இருந்தது. மத்திய அரசின் உத்தரவுப்படி, தற்போது, இரண்டு ஆண்டு படிப்பாக உயர்த்தப்பட்டது. இதற்கு, தனியார் கல்லூரிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், புதிய பாடத்திட்டம் அறிவிக்கப்பட்டு, இரண்டாண்டு பி.எட்., படிப்பு அமலுக்கு வந்தது.இந்நிலையில், இரண்டாம் ஆண்டு பி.எட்., படிப்பை அமல்படுத்த, பல கல்லூரிகள், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவில்லை என புகார் எழுந்துள்ளது.
கடந்த, 2015 வரை, ஓராண்டு படிப்பாக பி.எட்., இருந்தது. மத்திய அரசின் உத்தரவுப்படி, தற்போது, இரண்டு ஆண்டு படிப்பாக உயர்த்தப்பட்டது. இதற்கு, தனியார் கல்லூரிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், புதிய பாடத்திட்டம் அறிவிக்கப்பட்டு, இரண்டாண்டு பி.எட்., படிப்பு அமலுக்கு வந்தது.இந்நிலையில், இரண்டாம் ஆண்டு பி.எட்., படிப்பை அமல்படுத்த, பல கல்லூரிகள், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவில்லை என புகார் எழுந்துள்ளது.
இதை தொடர்ந்து, அனைத்து கல்லூரிகளிலும் ஆய்வு நடத்த, மத்திய அரசின் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் முடிவு செய்துள்ளது. வரும் ஜூலை, 1ம் தேதி முதல், 690 கல்லூரிகளிலும், இந்த சோதனையை நடத்த, ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கு, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் கடிதம் அனுப்பியுள்ளது.இந்த தகவலை, அனைத்து கல்லூரிகளுக்கும், தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலை எச்சரிக்கை கடிதமாக அனுப்பியுள்ளது. எனவே, பி.எட்., கல்லூரிகள் கிலியில் உள்ளன. சரியான இடவசதிஇல்லாத சில, 'டுபாக்கூர்' தனியார் கல்லூரிகளில், அவசர அவசரமாக வகுப்பறைகளை இரண்டாக பிரிக்கும் பணிகள் துவங்கியுள்ளன.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை