Ad Code

Responsive Advertisement

கல்வி உதவித்தொகை பெற 'ஆதார்' எண் கட்டாயம்

'மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற மாணவர்களுக்கு கட்டாயம், 'ஆதார்' எண் இருக்க வேண்டும்' என, மத்திய பல்கலை மானியக்குழுவான, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு சார்பில், பல்கலை மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், கல்லுாரி மாணவர்கள், தலித், சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு முதல், மத்திய அரசின் அனைத்து உதவித்தொகையையும், நேரடி பயனாளி திட்டத்தின் மூலம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. 


இதன் தொடர்ச்சியாக, யு.ஜி.சி., செயலர் ஜஸ்பால் சந்து, ஒரு சுற்றறிக்கையை, பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளுக்கு அனுப்பியுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு உத்தரவுப்படி, அனைத்து மானியம் மற்றும் உதவித்தொகைகளை நேரடியாக பயனாளிகளுக்கே வழங்க வேண்டும். எனவே, இந்த ஆண்டு முதல், கல்வி உதவித்தொகை, ஊக்கத்தொகை போன்றவற்றை பெற, மாணவர்களுக்கு ஆதார் எண் கட்டாயம் இருக்க வேண்டும். இதுகுறித்து அவர்களுக்கு உரிய அறிவுறுத்தல் செய்ய வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement