தமிழகத்தில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டம் சார்பில் கடினமான பாடங்களான அறிவியல், கணிதம், தொழில்நுட்பம், பொறியியல் ஆகியவற்றை ஆசிரியர்கள் எளிதாக மாணவர்களுக்கு கற்பிப்பதற்காகவும், மாணவர்களை புத்தாக்க சிந்தனைகளுடன் மாறுபட்டு சிந்திக்கத் தூண்டும் வகையிலும் `ஸ்டெம்’ பயிற்சி திட்டம் நடப்பு கல்வி ஆண்டில் முதன்முறையாக தொடங்கப்பட உள்ளது.
இந்த செய்முறை பயிற்சிகளுக்கான உபகரணங்கள், ஆசிரியர்களுக்கான வழிகாட்டுதல் கையேடு ஆகியவை அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டம் மூலம் வழங்கப்பட உள்ளது. 9ம் வகுப்பு மாணவர்களுக்கு, 3ம் வகுப்பு முதலான பாடங்களின் அடிப்படையில் செயல்திட்டங்கள் எளிமையாக வடிவமைக்கப்பட்டன. பின்னர் ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு, 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஸ்டெம் செய்முறை பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இந்த கல்வியாண்டு முதல் 220 அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்படுகிறது. மேலும் மாணவர்களை புத்தாக்க சிந்தனைகளுடன் மாறுபட்டு சிந்திக்க தூண்டும் வகையிலும், ஸ்டெம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
எளிமையான செய்முறை பயிற்சிகளை ஆசிரியர்கள் முதலில் செய்து காட்டுவார்கள். பின்னர் மாணவர்களே இந்த செய்முறை பயிற்சிகளை தானாகவே செய்வார்கள். கடினமான அறிவியல் பாடங்கள் கூட எளிதில் புரியும்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை