கரும்பலகையில் எழுதுவதால் மாணவர்கள் எளிதில் பயில முடியும் என்று ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பான ஆய்வை செராமிக்ஸ்டீல் நிறுவனம் நடத்தியது. இந்த ஆய்வில் 97சதவீதம் ஆசிரியர்கள், கரும்பலகையில் எழுதிக் கற்பதன் மூலம் மாணவர்கள் எளிதாகப் பாடங்களை புரிந்துகொள்ள முடியும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
செராமிக்ஸ்டீல் ,பாலிவிஷன், டீச் ஃபார் இந்தியா,ஒயிட்மார்க் நிறுவனம் ஆகியவை இணைந்து நூற்றுக்கணக்கான ஒயிட்போர்டுகள், பிளாக்போர்டுகளை பள்ளிகளுக்கு நன்கொடையாக அளித்துள்ளது. மும்பை, டெல்லி, புனே, பெங்களூரு, ஹைதராபாத், சென்னை, சென்னை, ஆமதாபாத் ஆகிய நகரங்களிலுள்ள பள்ளிகளுக்கு இந்த கரும்பலகைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு முழுவதும் பள்ளிகளுக்கு இதுபோன்ற நன்கொடைகள் வழங்கப்படும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில் கல்வியை மேம்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் பாலிவிஷன் நிறுவனம் எடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வியை மேம்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வும் நடத்தப்பட்டது. அப்போதுதான் கரும்பலகைகளில் எழுதிக் கற்பதன்மூலம் மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ள முடியும் என தாங்கள் நம்புவதாக97சதவீத ஆசிரியர்கள் கருத்து தெரிவித்தனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை