தமிழகத்தில், 700க்கும் மேற்பட்ட தனியார் சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் செயல்படுகின்றன. இதுதவிர, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளும் உள்ளன.இவற்றில், அரசு கல்லுாரிகளை விட, அரசு உதவி பெறும் கல்லுாரிகளும், தனியார் கல்லுாரி களும், கல்வித் தரத்தில் உயர்ந்திருப்பதால், அவற்றில் சேர மாணவ, மாணவியர் மத்தியில் போட்டி நிலவுகிறது.
பி.காம்., - பி.எஸ்சி., கணிதம், இயற்பியல், பயோ டெக்னாலஜி, போன்ற படிப்புகளுக்கு, அதிக மவுசு உள்ளது. சிபாரிசு கடிதங்களும், அரசியல்வாதி கள், கல்வி அதிகாரிகளின் மறைமுக உத்தரவுகளும், மாணவர் சேர்க்கையில் முக்கிய இடம் பிடிக்கின்றன.
ஒவ்வொரு கல்லுாரியும், பாடப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட மாணவர் எண்ணிக்கை, தினசரி காலியிடம், கல்வி கட்டணம் உள்ளிட்ட விவரத்தை, இணையதளத்தில் தினமும் வெளியிட வேண்டும். ஆனால், எந்த கல்லுாரியும் இதை கடைபிடிப்பதில்லை. நன்கொடை, சிபாரிசு ஆகியவற்றின் மூலம், 'சீட்'களை நிரப்பவே, காலி இடங்களின் உண்மை நிலை மறைக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை