'பள்ளிக் குழந்தைகளுக்கு, மாம்பழச்சாறு வழங்கும் திட்டம், உகந்த திட்டமல்ல' என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.சட்டசபையில், கேள்வி நேரத்தின் போது நடந்த விவாதம்:
முதல்வர் ஜெயலலிதா: மாம்பழச்சாறும், மாம்பழக் கூழும் உபரியாக உள்ளது என்றால், அதற்கு என்ன வழி காணலாம்; எப்படி விற்பனை செய்யலாம்; எப்படி ஏற்றுமதி செய்யலாம் என, பல வழிகளை அரசு ஆராயும்.அதற்காக, பள்ளிக் குழந்தைகளுக்கு மாம்பழ சாற்றை கொடுத்தால், பள்ளிக் குழந்தைகள் எல்லாருக்கும், இது ஒத்துக்காது. பல குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு ஏற்படுகிற ஆபத்து இருக்கிறது. எனவே, அது உகந்த திட்டம் அல்ல.
செங்குட்டுவன்: கடந்த, 2011ல், கலெக்டர்கள் மாநாட்டில், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் கொடுத்த பரிந்துரையை ஏற்று, மதிய உணவு திட்டத்துடன், மாம்பழ, 'மில்க் ஷேக்' 200 மி.லி., வழங்கப்படும் என, முதல்வர் தான் அறிவித்தீர்கள்.
முதல்வர் ஜெயலலிதா: வாழ்க்கையில், பல கட்டங்களில் பலவற்றை கூறுகிறோம். அதன்பின், அதை பற்றி நன்றாக புரிந்து கொண்ட பின், கருத்தை மாற்றிக் கொள்கிறோம். அன்றைய தினம் மாம்பழச்சாறு வழங்கலாம் என்று நான் நினைத்தேன். அதன்பின், டாக்டர்கள் மாம்பழச்சாறு வழங்கினால், குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு ஏற்படும்என, கூறினர். அதனால், அந்த திட்டம் கைவிடப்பட்டது.
எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்: உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறோம். மாம்பழச் சாறுக்கு பதிலாக, மாணவர்களுக்கு பால் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுமா?
முதல்வர் ஜெயலலிதா: இது, மெயின் கேள்வியை ஒட்டியதாக இல்லை. வேண்டும் என்றால், எதிர்க்கட்சி தலைவர் தனி கேள்வி கேட்கட்டும்.இவ்வாறு விவாதம் நடந்தது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை