அரசு சட்டக் கல்லுாரிகளில், சட்டப் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் வினியோகம் செய்யப்படுகின்றன. அம்பேத்கர் சட்டப் பல்கலையின் இணைப்பில்,சென்னை, மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி,செங்கல்பட்டு மற்றும் வேலுாரில், ஏழு அரசுசட்டக் கல்லுாரிகள் செயல் படுகின்றன.
இவற்றில், ஒருங்கிணைந்த, பி.ஏ., - எல்.எல்.பி., மற்றும் மூன்றாண்டு எல்.எல்.பி., படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான நடவடிக்கை துவங்கியுள்ளது.
இந்த கல்லுாரிகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், இன்று முதல் வழங்கப்படுகின்றன. பி.ஏ., - எல்.எல்.பி., ஐந்தாண்டு படிப்புக்கு, பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். எல்.எல்.பி., மூன்றாண்டு படிப்புக்கு, பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.ஏழு சட்டக் கல்லுாரிகளிலும், அம்பேத்கர் சட்ட பல்கலையிலும், நேரடியாக விண்ணப்பங்களை பெறலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, ஐந்து ஆண்டு படிப்புக்கு, ஜூன் 30; மூன்றாண்டு படிப்புக்கு, ஜூலை 15க்குள் வழங்க வேண்டும்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை