ஆசிரியர்களுக்கு கல்விச் சான்றிதழ் உண்மைத் தன்மை பிரச்னையால், பல மாவட்டங்களில், ஆசிரியர்களுக்கு இரட்டை ஊதிய உயர்வு தடைபட்டுள்ளது. அரசு பள்ளிகளில், 10 ஆண்டு பணிபுரிந்தவர்களுக்கு தேர்வுநிலையும், 20 ஆண்டுகள் பணிபுரிந்தோருக்கு சிறப்புநிலை அந்தஸ்தும் வழங்கப்படும். இந்த அந்தஸ்து பெறும் ஆசிரியர்களுக்கு, இரட்டை ஊதிய உயர்வு கிடைக்கும்.
கடந்த ஒரு வாரமாக தமிழகம் முழுவதும், இந்த தேர்வுநிலை அந்தஸ்து பெறும் ஆசிரியர்கள் பட்டியல் தேர்வு செய்யப்பட்டு, மாவட்ட கல்வி அதிகாரிகள் மூலம் உத்தரவு வழங்கப்படுகிறது.
இதற்கு, ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மை வேண்டுமென, பல இடங்களில் தேர்வுநிலை உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்வுத்துறைக்கு அனுப்பப்பட்ட சான்றிதழ் உண்மைத் தன்மை விண்ணப்பங்களுக்கு பதில் கிடைக்கும் வரை, ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்காது என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை