அண்ணா பல்கலையில், 25 ஆயிரம் மாணவியர் உட்பட, 71 ஆயிரம் பேர், இன்ஜி., கவுன்சிலிங்குக்கு, முதல் தலைமுறை பட்ட தாரிகளாக பதிவு செய்துள்ளனர். அண்ணா பல்கலையின் இணைப்பு கல்லூரிகளில், பி.இ., -- பி.டெக்., படிக்க, வரும், 24ம் தேதி கவுன்சிலிங் துவங்குகிறது. இதற்கு விண்ணப்பித்தவர்களுக்கு, 10 இலக்க, 'ரேண்டம்' எண், நேற்று காலை வெளியிடப்பட்டது.
ரேண்டம் எண்ணின் கூட்டுத் தொகை யாருக்கு அதிகம் உள்ளதோ, அந்த மாணவர் தர வரிசை பட்டியலில், முன்னுரிமைக்கு தேர்வு செய்யப் படுவார். இந்த ஆண்டு, 2.53 லட்சம் பேர், 'ஆன்லைனில்' விண்ணப்பங்களை பதிவு செய்தனர். அவர்களில், 1.84 லட்சம் பேர் விண்ணப்ப கட்டணம் செலுத்தினர். அதேநேரம், அண்ணா பல்கலை அளித்த இறுதி கால அவகாசம் வரை, ஒரு லட்சத்து, 34 ஆயிரத்து, 994 பேர் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பியுள்ளனர். இவர்களில், 51 ஆயிரத்து, 226 பேர் மாணவியர். தொழிற்கல்வி பாடப்பிரிவில் படித்தவர்களில், 62 மாணவியர் உட்பட, 2,180 பேர் விண்ணப்பித்துள்ளனர். மொத்த விண்ணப்பதாரர்களில், 71 ஆயிரத்து, 273 பேர் முதல் தலைமுறை பட்டதாரிகளாக பதிவு செய்துள்ளனர்; இவர்களில், 25 ஆயிரத்து, 242 பேர் மாணவியர். விளையாட்டுப் பிரிவில், 554 மாணவியர் உட்பட, 1,807 பேர்; மாற்றுத் திறனாளிகளில், 61 மாணவியர் உட்பட, 225 பேர்; முன்னாள் ராணுவத்தினர் குடும்பத்தினரில், 750 மாணவியர் உட்பட, 1,934 பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டில், 28 ஆயிரத்து, 249 மாணவியர் உட்பட, 80 ஆயிரத்து, 446 பேர் முதல் தலைமுறை பட்டதாரிகளாக பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை