தமிழக கால்நடை மருத்துவ பல்கலைக் கழகத்தில், இளநிலை படிப்புகளில் சேருவதற்காக, 16,653 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு உள்ளன. இதற்கான மாணவர் கவுன்சிலிங், ஜூலை இரண்டாவது வாரம் நடக்கிறது. இதுகுறித்து, பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் எஸ்.திலகர் கூறியதாவது:
நான்கு இளநிலை படிப்புகளில் சேருவதற்காக, 18,302 பேர், 'ஆன் லைனில்' மனு செய்திருந்தனர். அவர்களில், 16,653 பேர், விண்ணப்பங்களை முறையாக பதிவிறக்கம் செய்து, நேரில் சமர்ப்பித்து உள்ளனர். அதிகபட்சமாக, கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு படிப்பில் சேர, 13,432 பேர் ஆர்வம் காட்டியுள்ளனர். அந்தந்த பிரிவுகளுக்கான, 'கட் - ஆப்' மதிப்பெண், விரைவில் நிர்ணயிக்கப்படும். தகுதி உள்ள மாணவர்களுக்கு, ஜூலை இரண்டாவது வாரத்தில், கவுன்சிலிங் நடத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை