தமிழகத்தில் பின்தங்கிய சுமார் 3,000 மாணவர்களை தத்து எடுத்து அவர்களின் அடிப்படைக் கல்வியை மேம்படுத்திக் கொண்டிருக்கிறது அமெரிக்கா வாழ் தமிழர்களால் நிர்வகிக்கப்படும் தமிழ்நாடு அறக்கட்டளை.அமெரிக்கா வாழ் தமிழர்களில் 4 குடும்பங்கள் கைகோர்த்து 1974-ல் அமெரிக்காவில் ‘தமிழ்நாடு அறக்கட்டளை’யை உருவாக்கினார்கள்.
இதுகுறித்து பேசிய அறக்கட்டளையின் செயல்இயக்குநர் வசுமதி பென்னி, “40 ஆண்டுகளாக அறக்கட்டளை செயல்பட்டாலும் கடந்த 6 ஆண்டுகளாகத்தான் முறைப்படுத்தப்பட்ட வழியில் சேவை செய்ய ஆரம்பித்திருக்கிறோம்.பின்தங்கிய பகுதிகளில் படிக்கும் மாணவர்கள் தங்களது பெயரைக்கூட சரிவர எழுதத் தெரியாத நிலையில் 9-ம் வகுப்புவரை வந்துவிடுகிறார்கள். இவர்கள் தான் எங்களின் இலக்கு. கடந்த 6 ஆண்டுகளில் நாகை, திருவாரூர், நாமக்கல், சிவகங்கை, கடலூர், வேலூர் ஆகிய 6 மாவட்டங்களில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் கல்வியில் பின் தங்கிய சுமார் 3,000 மாணவர்களை தத்தெடுத்திருக்கிறோம்.இதன்படி மாவட்டத்துக்கு 5 முதல் 6 பள்ளிகள் வீதம் 39 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு பள்ளி நேரத்திலேயே தனிப்பயிற்சி கொடுக்கிறோம்.
இதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் தனித் தனி ஆசிரியர்களை நாங்கள் பணியமர்த்தி இருக்கிறோம். மாணவர்களை தமிழ், ஆங்கிலம், கணிதப் பாடங்களில் மேம்படுத்துவதுதான் இவர்களது பணி. நல்ல வரவேற்பு இருப்பதால் இந்த ஆண்டு நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலும் தலா 6 பள்ளிகளுக்கு எங்களது சேவையை விரிவுபடுத்த இருக்கிறோம்’’ என்றார்.தொடர்ந்து பேசிய வசுமதி, “10 மற்றும் 12-ம் வகுப்பு மாண வர்களுக்கு தேர்வுகளை எதிர் கொள்வது குறித்த தன்னம்பிக்கை பயிற்சி, பள்ளிகளுக்கான அடிப் படை கட்டுமானங்கள் போன்ற வற்றை ஏற்படுத்தி தந்திருக்கிறோம்.
சீர்காழியில் ‘அன்பாலயம்’ என்ற மனநலம் குன்றிய மற்றும் மாற்றுத் திறன் குழந்தைகள் இல்லத்துக்கு சொந்தமாக இடம் வாங்கி ரூ.60 லட்சம் செலவில் கட்டிடங்களைக் கட்டித் தந்திருக்கிறோம்அமெரிக்கா வாழ் தமிழர்களின் குழந்தைகள் விடுமுறைக்காக சொந்த ஊர்களுக்கு வரும்போது, அவர்களை இங்குள்ள பள்ளிகளுக்கு அழைத்துச் சென்று மாணவர்களோடு கலந்துரையாட வைக்கிறோம். இதன் மூலம் இரு தரப்புக் குழந்தைகளும் தங்களது கல்வி முறையையும் கலாச்சாரத்தையும் பரஸ்பரம் பரிமாறிக் கொள்ள ஒரு தளத்தை நாங்கள் உருவாக்கித் தருகிறோம்’’ என்று சொன்னார்.வெள்ள பாதிப்புகளின் போது நிவாரண உதவிகளையும் வழங்கி இருக்கும் தமிழ்நாடு அறக்கட்டளை, வெள்ளத்தால் சேதமடைந்தசென்னை அசோக்நகர் நூலகத்தை ரூ.30 லட்சம் செலவில் புதுப்பித்துக் கொண்டிருப்பது கூடுதல் தகவல்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை