திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 10 சதவீத மாணவர்சேர்க்கை சரிவடைந்துள்ளதற்கு, பள்ளிக்கு சரியாக வராத ஆசிரியர்களே காரணம் என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதனால் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பலருக்கு தமிழ் எழுத்துக்கள் 247-ஐயும் பிழையின்றி எழுதத் தெரியவில்லை. இதுபோன்ற காரணங்களால், பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் கூட, தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்த்து விடுகின்றனர். 860 ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகளில், 150க்கும் மேற்பட்ட பள்ளிகளில் 20க்கும் குறைவான மாணவர்களே பயின்று வருகின்றனர். 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால், 40 பள்ளிகளில் 10 மாணவர்களுக்கு 2 ஆசிரியர்கள் வீதம் பணியாற்றி வருகின்றனர். இலவசப் பாடப் புத்தகம், காலணி, சீருடை, மதியஉணவு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அரசு அறிவித்தாலும், சில ஆசிரியர்களின் பொறுப்பற்ற செயல்பாடு, அரசுப் பள்ளிகள் மீது பொதுமக்களுக்கு தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்துகிறது என நல்லாசிரியர் விருது பெற்ற ஒரு ஆசிரியர் தெரிவித்தார்.
இதுகுறித்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கூ.பாண்டியராஜா தெரிவித்தது:
தமிழக அரசின் உத்தரவுப்படிமாணவர் சேர்க்கையை அதிகரிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட ஆய்வில், பள்ளிக்கு சரியாக வராத ஆசிரியர்கள் மீது, அந்தந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் விசாரணை நடத்தி, தவறு செய்யும் ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை