அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட, இன்ஜி., கல்லுாரிகளின் கடந்த ஆண்டு, 'கட் - ஆப்' மதிப்பெண் வெளியிடப்பட்டு உள்ளது. ஆனால், தொழில்நுட்ப கோளாறால், இணையதளத்தில் மதிப்பெண்ணை பார்க்க முடியாமல், மாணவர்கள் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
அண்ணா பல்கலைக்குட்பட்ட, 550 இன்ஜி., கல்லுாரிகளின் மாணவர் சேர்க்கை, தமிழக அரசு சார்பில், ஒற்றை சாளர கவுன்சிலிங் மூலம் நடத்தப்படுகிறது. அண்ணா பல்கலையில், இந்த கவுன்சிலிங் நடக்க உள்ளது.தற்போது, 'ஆன்லைன்' பதிவு மூலம், இன்ஜி., விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. அண்ணா பல்கலையின், https:/www.annauniv.edu/tnea2016 இணையதளத்தில், மாணவர்கள் தங்களின் விவரங்களை பதிவு செய்யலாம்.
பின், ஆன்லைனில் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி, விண்ணப்பத்தைநகல் எடுத்து, உரிய சான்றிதழ் நகலுடன், தமிழக இன்ஜி., மாணவர் சேர்க்கை செயலருக்கு, தபாலில் அனுப்ப வேண்டும்.ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்ய, மே 24ம் தேதி கடைசி நாள். விண்ணப்பங்கள், மே 27ம் தேதிக்குள், அண்ணாபல்கலைக்கு கிடைக்கும் வகையில், தபாலில் அனுப்ப வேண்டும்.இதற்கிடையே, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளதால், கடந்த ஆண்டின், கட் - ஆப் மதிப்பெண்ணை அண்ணா பல்கலை வெளியிட்டு உள்ளது.
ஒவ்வொரு இன்ஜி., கல்லுாரியும், கடந்த ஆண்டு, எந்த கட் - ஆப் மதிப்பெண் வரை, மாணவர்களை சேர்த்தது என்ற விவரம், கல்லுாரி வாரியாக, மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டு உள்ளது.இதன்படி, மாணவர்கள் தங்களின் தற்போதைய, கட் - ஆப் மதிப்பெண்ணின் படி, எந்த கல்லுாரியில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.
இந்த கட் - ஆப் மதிப்பெண்ணை பார்க்க, மாணவர்களும், பெற்றோரும் முயற்சித்தனர். ஆனால், இணையதளத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், நேற்று இரவு வரை, மதிப்பெண் பட்டியலை பார்க்க முடியாமல் தவித்தனர்.நேற்று மாலை வரை, இன்ஜி., படிப்பில் சேர, 2 லட்சத்து, 7,512 பேர், ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர். ஆனால், 1.36 லட்சத்து, 364 பேர் மட்டுமே விண்ணப்ப கட்டணம் செலுத்தி, விண்ணப்பங்களை தபாலில் அனுப்பியுள்ளனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை