மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள், இன்று வெளியாகும் என தெரிகிறது.சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் உள்ள பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, மார்ச், 1ல் பொதுத் தேர்வு துவங்கி, ஏப்ரலில் முடிந்தது; 10.67 லட்சம் பேர் பங்கேற்றனர்.தேர்வு முடிவுகள், மே, 23ல் வெளியாகும் என, எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அதற்கு முன், இன்று பகல்,12:00 மணிக்கு வெளியிடப்படும் என, தகவல்கள் வெளியாகியுள்ளன.தேர்வு முடிவுகளை, http:/cbse.nic.in மற்றும் http:/cbseresults.nic.in ஆகிய இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம். இந்த ஆண்டு கணித தேர்வு மிகவும் கடினமாக இருந்ததாக, மாணவர்கள் அதிருப்தி தெரிவித்தனர். அதனால், கணித வினாத்தாள் குறித்து ஆய்வுசெய்யவும், கூடுதல் கருணை மதிப்பெண் வழங்குவது குறித்து முடிவெடுக்கவும், சி.பி.எஸ்.இ., சார்பில் நிபுணர் குழு அமைக்கப்பட்டது.
இந்த குழு, பெற்றோர், மாணவர் மற்றும் கல்வியாளர்களின் கருத்துகளை பெற்று, தேர்வு கமிட்டிக்கு சில பரிந்துரைகளை அளித்துள்ளது. அதன்படி, மாணவர்களுக்கு போதிய மதிப்பெண் வழங்கப்பட்டிருக்கும் என, மாணவர், பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை