ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ படிப்புக்கு, வரும் 20ம் தேதி முதல், விண்ணப்பங்கள் வழங்கப்படும்' என, கல்வித் துறை அறிவித்துள்ளது.இதுகுறித்து, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தொடக்க கல்வி டிப்ளமோ படிப்பில், ஒற்றை சாளர முறையில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், மே 20ம் தேதி முதல், ஜூன் 10ம் தேதி வரை, காலை 10:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை வழங்கப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, ஜூன் 10ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்கள் மற்றும் முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களில், விண்ணப்பங்களை பெறலாம். பட்டியலினத்தவர், அருந்ததியர் மற்றும் பழங்குடியினர் ஆகியோர், 250 ரூபாய் செலுத்தியும், இதர பிரிவினர், 500 ரூபாய் செலுத்தியும் விண்ணப்பங்களை பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை