தமிழகம் முழுவதும் நேற்று காலை 10:31 மணிக்கு பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாகும்' என அரசு தேர்வுத்துறை அறிவித்தது. அதன்படி முதன்மைக் கல்வி அலுவலர்கள் வெளியிடுவதற்கு முன்பே, காலை 9:30 மணிக்கே மாவட்ட அளவிலான தேர்வுமுடிவுகள் 'வாட்ஸ் ஆப்'பில் வெளிவர துவங்கின. மேலும் தேர்வு முடிவுகளும் முன்னுக்கு பின் முரணாக வந்தன.
இதனால் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: காலை 6 மணிக்கு அந்தந்த பள்ளிகளுக்கு உரிய தேர்வு முடிவுகளை கொடுத்து விட்டோம். அவர்களிடம் காலை 10:31 மணிக்கு பின்பே முடிவுகளை வெளியிட சொன்னோம். ஆனால் சில பள்ளிகள் காலை 9 மணிக்கே வெளியில் தெரிவித்ததால் குழப்பம் ஏற்பட்டது, என்றார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை