Ad Code

Responsive Advertisement

ஓய்வூதியர்களுக்கு ஆதார் அட்டை சென்னையில் சிறப்பு ஏற்பாடு.

ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்தில், ஓய்வூதியர்கள் ஆதார் அட்டை பெற, சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது' என, கருவூலம் மற்றும் கணக்கு துறை இயக்குனர் முனியநாதன் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:சென்னை ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்தில், 2016 - 17ம் ஆண்டிற்கான, ஓய்வூதியர் நேர்காணல் நடந்து வருகிறது.

ஓய்வூதியர் நலன் கருதி, காலை 9:00 மணி முதல், நேர்காணல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.நேர்காணலுக்கு வருவோர், ஓய்வூதிய புத்தகம், வங்கிக் கணக்கு எண், வருமானவரி கணக்கு எண், ரேஷன் கார்டு, ஆதார்அட்டை ஆகியவற்றின் நகல்களை சமர்ப்பிக்க வேண்டும்.



 இதுவரை, ஆதார் அட்டை பெறாதவர்கள் விண்ணப்பிப்பதற்காக, சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.எனவே, தமிழ்நாடு அரசின் மாநில ஓய்வூதியம் பெறும், அனைத்து ஓய்வூதியர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஜூன் மாத இறுதிக்குள், நேர்காணல் செய்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement