ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்தில், ஓய்வூதியர்கள் ஆதார் அட்டை பெற, சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது' என, கருவூலம் மற்றும் கணக்கு துறை இயக்குனர் முனியநாதன் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:சென்னை ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்தில், 2016 - 17ம் ஆண்டிற்கான, ஓய்வூதியர் நேர்காணல் நடந்து வருகிறது.
ஓய்வூதியர் நலன் கருதி, காலை 9:00 மணி முதல், நேர்காணல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.நேர்காணலுக்கு வருவோர், ஓய்வூதிய புத்தகம், வங்கிக் கணக்கு எண், வருமானவரி கணக்கு எண், ரேஷன் கார்டு, ஆதார்அட்டை ஆகியவற்றின் நகல்களை சமர்ப்பிக்க வேண்டும்.
இதுவரை, ஆதார் அட்டை பெறாதவர்கள் விண்ணப்பிப்பதற்காக, சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.எனவே, தமிழ்நாடு அரசின் மாநில ஓய்வூதியம் பெறும், அனைத்து ஓய்வூதியர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஜூன் மாத இறுதிக்குள், நேர்காணல் செய்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை