பி.இ., 2 ம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கு ஆன்-லைனில் இன்று (மே 24) முதல் விண்ணப்பிக்கலாம் என, காரைக்குடி பி.இ., 2 ம் ஆண்டு நேரடி சேர்க்கை செயலர் மாலா தெரிவித்தார். அவர் கூறியதாவது:
டிப்ளமோ, பி.எஸ்.சி., முடித்தவர்கள், பி.இ., பி.டெக்., 2 ம் ஆண்டில் நேரடியாக சேரலாம். இதற்கான விண்ணப்பம், www.accet.co.in, www.accet.edu.in, www.accetlea.com என்ற இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
விண்ணப்பத்தை 'ஆன்-லைனில்' பூர்த்தி செய்ய வேண்டும். அதன்பின் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அத்துடன் சேர்க்கை கட்டணம் ரூ.300 க்கான டி.டி.,-மதிப்பெண் விபர பட்டியல், ஜாதி சான்றிதழ் ஆகியவற்றை இணைக்க வேண்டும். முன்னாள் ராணுவவீரர் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள், அதற்குரிய ஆதாரங்களை இணைக்க வேண்டும்.விண்ணப்பங்களை செயலர், பி.இ., 2 ம் ஆண்டு நேரடி சேர்க்கை, அழகப்ப செட்டியார், பொறியியல் கல்லுாரி, காரைக்குடி என்ற முகவரிக்கு ஜூன் 10 க்குள் அனுப்ப வேண்டும். எஸ்.சி.,-எஸ்.டி., மாணவர்களுக்கு கட்டணம் கிடையாது. டி.டி., இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும், என்றார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை