11-ஆம் வகுப்பு/12-ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக் கணினிகள் வழங்கப்படும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
இந்த மடிக் கணினியுடன், கட்டணமில்லா இணையதள இணைப்பு வசதியும் மாணாக்கர்களுக்கு வழங்கப்படும். பள்ளி மாணாக்கர்களுக்கான பல்வேறு திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
பள்ளிக் கல்வியின் தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இணையதளம் வாயிலான ஒருங்கிணைந்த பயிலும் திட்டம் செயல்படுத்தப்படும்.
பள்ளிகளில் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.
நலிவுற்ற மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினருக்கு தனியார் பள்ளிகளில் பயில வழங்கப்படும் ஒதுக்கீடு தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
உயர்கல்வி மேம்பாடு :
புதிய கல்லூரிகள் தேவைக்கேற்ப துவங்கப்படுவதுடன், அனைத்து கல்லூரிகளின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.
கல்லூரிகளில் கல்வித் தரம் உயர்த்தப்படும்.
பல்கலைக்கழகங்கள் மேக கணினியம் (ஊடடிரன ஊடிஅயீரவiபே) மூலம் இணைக்கப்பட்டு, மாணாக்கர்கள் கல்வித் திறன் உயர வழிவகை செய்யப்படும்.
தொழில் நிறுவனங்களுடன் இணைந்து கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்கள் விடுமுறை காலங்களில் வேலை வாய்ப்பு பெறுவதற்கான பயிற்சிகள் பெற நடவடிக்கை எடுக்கப்படும்
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை